இஸ்ரேல் டாங்க் தகர்ப்பு- 11 வீரர்கள் பலி
பெய்ரூட்:
ஹிஸ்புல்லா படையினரின் கொரில்லா தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ டாங்க் தகர்க்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் 11 வீரர்கள்கொல்லப்பட்டனர்.
வான் வழி, தரை வழித் தாககுதல் மூலம் தெற்கு லெபனானின் சில பகுதிகளையு இஸ்ரேலிய படைகள் பிடித்துள்ளன.இப்பகுதிகளை மீட்க ஹிஸ்புல்லா படையினர் தீவிரமாக முயன்று வருகின்றனர்.இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள 7 இடங்களில் இஸ்ரேலிய ராணுவத்திற்கும், ஹிஸ்புல்லா படையினருக்கும் இடையே கடும் சண்டைநடந்து வருகிறது. கண்ணி வெடிகுண்டுகளை வைத்தும், டாங்க் எதிர்ப்பு ராக்கெட்டுகளை ஏவியும் ஹிஸ்புல்லா படையினர்,இஸ்ரேல்வீரர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மர்காபா பகுதியில் நள்ளிரவில் நடந்த சண்டையில் ஒரு டாங்க் தகர்க்கப்பட்டுள்ளது. இதில் 11 இஸ்ரேல் வீரர்களகொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று நடந்த இதேபோன்ற கொரில்லா தாக்குதலில் 4 ஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே, தெற்கு லெபனானில 10,000 வீரர்களை இஸ்ரேல் ஊடுறுவ விட்டுள்ளது. மேலும் 20 கிராமங்கள் வரை தனதுகட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. தனது நாட்டு எல்லையிலிருந்து தற்போது 7 கிமீ தூரம் வரை லெபனானுக்குள் இஸ்ரேல்ஊடுறுவியுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினரை ஒடுக்க மேலும் 15 கிமீ தூரம் வரை முன்னேறிச் செல்லவும் இஸ்ரேலி திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications