திருப்பதி-ரூ3 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
தீவிரவாதிகளை கண்காணிக்க திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ. 3 கோடியில் அதி நவீன கேமாரக்கள்பொறுத்தப்பட்டவுள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் அங்கு24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தீவிரவாத இயக்கங்கள் திருப்பதி உள்பட நாட்டின் முக்கிய கோவில்களை குறி வைத்துள்ளதையடுத்துகோவிலின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
ரூ. 3 கோடி செலவில் 125 அதி நவீன குளோஸ் சர்க்யூட் கேமராக்கள் பொறுத்தப்படவுள்ளன. இதன்மூலம்கோவிலின் ஒவ்வொரு பகுதியையும் 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும்.
இந் நிலையில் திருப்பதி கோவிலுக்கு ரூ. 1 கோடியில் டிஜிட்டல் ஸ்கிரீன் வாங்கப்படவுள்ளது. பிரமோற்சவம்உள்பட கோவிலின் முக்கிய நிகழ்ச்சிகளை கோவிலுக்கு வெளியிலும் இதில் ஒளிபரப்பப்படும். தொழிலதிபர்கெளதம் சிங்கானியா இந்த டிஜிட்டல் ஸ்கிரீனுக்கான செலவை ஏற்றுக் கொள்ள இருக்கிறார்.












Click it and Unblock the Notifications