For Daily Alerts
Just In
தமிழக ஐஎன்ஏ வீரர்களுக்கு கலாம் கெளரவம்
திருச்சி:
டெல்லியில் ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த ஐஎன்ஏ(நேதாஜியின் இந்திய தேசியப் படை) வீரர்கள் 5 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த எஸ்பி.நாராயணசாமி (83), எஸ்.முத்துசாமி (80), ஈரோட்டைச்சேர்ந்த வெங்கடாசலம், திருவள்ளூரைச் சேர்ந்த கிருஷ்ணன், சென்னையைச் சேர்ந்தபாலகிருஷ்ணன் ஆகியோர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் ஐஎன்ஏ படையில்சிப்பாய்களாக பணியாற்றினர்.
இவர்களை வரும் 9ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விருந்தில்கெளரவிக்கவுள்ளார் அப்துல் கலாம். இதற்காக டெல்லி வருமாறு இவர்களுக்குஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து ஐவரும் டெல்லி புறப்பட்டுசென்றுள்ளனர்.
Story first published: Monday, August 7, 2006, 5:30 [IST]