என்னாச்சு என் ஓட்டு?-வாக்காளர் கிடுக்கிப் பிடி
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சட்டசபைத் தேர்தலில் எனது வாக்கு பதிவு செய்யப்பட்டதா, இல்லையா என்பதைத்தெரிவிக்கும்படிதலைமைத் தேர்தல் ஆணையருக்கு சேலத்தைச் சேர்ந்த வாக்காளர்ஒருவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
![]() |
சேலம் பள்ளக்காடு என்ற இடத்தைச் சேர்ந்த செந்தில்வேல் என்பவர் இதுதொடர்பாகதலைமைத்தேர்தல் ஆணையர்கோபாலசாமிக்கு அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸில்,கடந்த மே 8ம் தேதி நடந்த சட்டசபைத் தேர்தலில் சேலம் 2வது தொகுதிக்குட்பட்டவாக்குச்சாவடிக்கு நான் சென்றேன்.
அங்கிருந்த தேர்தல் அதிகாரியிடம் நான் யாருக்கும் ஓட்டுப் பாட விரும்பவில்லை.அதற்கான பதிவேட்டில் எனது விருப்பத்தை பதிவு செய்யும்படி கேட்டேன்.
ஆனால், அதற்கான 17 ஏ படிவம் எனக்குத் தரப்படவிலலை. படிவத்தைத் தருவதாககூறி 2 மணி நேரம் காகக வைத்தனர். இதனால் நான் திரும்பி விட்டேன்.
தேர்தலில் எனது வாக்கு பதிவு செய்யப்பட்டதா, இல்லையா என்பதை அறியவிரும்புகிறேன். அந்த விவரத்தை எனக்குத் தெரியப்படுத்தவும். இல்லாவிட்டால்நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார் செந்தில்வேல்.













Click it and Unblock the Notifications