தற்கொலை செய்த பெண் போலீசுக்கு அதிகாரிகளுடன் கள்ளத் தொடர்பு!!
சேலம்:
பெண் போலீஸ் தனலட்சுமி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரது கணவரைபோலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
![]() |
சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்தவர் தனலட்சுமி (28). இவரதுகணவர் கோபால கண்ணன் (35). இவர் சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலைபார்த்து வருகிறார்.
இந் நிலையில் தனலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். இதனால் தனது மகள் தற்கொலையில் சந்தேகம்இருப்பதாக தனலட்சுமியின் தந்தை துரைராஜின் புகாரின் பேரில் கோபால கண்ணனை அன்னதானப்பட்டிபோலீசார் கைது செய்தனர்.
ஆனால், தற்கொலை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தனலட்சுமிக்குப் பலருடன் கள்ளத் தொடர்புஇருந்துள்ளது தெரிய வந்துள்ளது. தனலட்சுமிக்கும் சூரமங்கலம் பகுதி மாநகரப் பொறுப்பில் இருக்கும் அதிமுகபிரமுகருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.
இதை கோபால கண்ணன் கண்டித்தபோது தனலட்சுமி அவரை விவாகரத்து செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.மேலும் இரவு பணிக்கு சென்ற தனலட்சுமிக்கு போலீஸ் அதிகாரிகளுடனும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுநாளடைவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்தப் பழக்கம் நாளடைவில் தனலட்சுமியை தடம் மாற வைத்துள்ளது. இதை கணவர் கோபால கண்ணன்கண்டித்ததால் தான் தனலட்சுமி தற்கொலை செய்ததாக தெரிகிறது.













Click it and Unblock the Notifications