சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு நிலம்- அதிமுக அரசு உத்தரவை ரத்து செய்தது திமுக அரசு
சென்னை:
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஐந்து சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு நிலம்வழங்கப்பட்டது தொடர்பான அரசு ஆணையை, திமுக அரசு ரத்து செய்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு மின்னணுகழகத்திற்குச் சொந்தமான 123 ஏக்கர் நிலத்தை ஐந்து சாப்ட்வேர் நிறுவனங்களுக்குதமிழக அரசு வழங்கியது.இது பெரும் சர்ச்சயைை எழுப்பியது. இந்த நிலம் வழங்கியதில்பல்வேறுமுறைகேடுகள் நடந்திருப்பதாக திமுக அப்போதே குற்றம் சாட்டியது.இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும்திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
இந் நிலையில் சமீபத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அமைச்சரவைக்கூட்டத்தில் ஐந்து சாப்ட்வேர் நிறுவனங்களுக்கும் நிலம வழங்கப்பட்டதை ரத்துசெய்யவும், மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தவும்முடிவுசெய்யப்பட்டுள்ளது.
காக்னிஸன்ட் டெக்னாலஜிஸ் லிமிட்டெட் (20 ஏக்கர்), மெகாசாப்ட் (25 ஏக்கர்),பென்ச்மார்க் சாப்ட்டெக் (25 ஏக்கர்), புரோட்டான் வெப் (3 ஏக்கர்), அட்வான்ஸ்சாப்ட்வேர்(50 ஏக்கர்) ஆகிய நிறுவனங்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் ரூ. 48 லட்சம் என்றவீதத்தில் அதிமுக ஆட்சியில் விற்கப்பட்டது.
கடந்த மார்ச் 1ம்தேதி இதுதொடர்பாக ஆணை பிறப்பித்தார் ஜெயலலிதா.
ஆனால் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இந்த அரசு ஆணை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது திமுக அரசு இந்த ஆணையை ரத்து செய்து விட்டது.
சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு தரப்பட்ட நிலத்தின் உண்மையான மதிப்பு ஒரு ஏக்கர்ரூ. 3 முதல் 4 கோடி என்று கூறப்படுகிறது. ஆனால் வெறும் 48லட்சம் ரூபாய்க்குஇந்த நிலத்தை தர ஒப்புக்கொண்டதன் பின்னணியில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகதிமுக குற்றம் சாட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications