காமவெறி-மருமகளை வெட்டி கொன்ற மாமனார்

Subscribe to Oneindia Tamil

தேனி:

மருமகளை அடைய மேற்கொண்டமுயற்சிகள் பலனளிக்காததால் அவரைஅரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு போலீஸில் சரணடைந்தான் காமவெறி பிடித்தமாமனார்.

தேனி அல்லிநகரத்தை சேர்ந்த துப்புறவுத் தொழிலாளியான பாண்டியனின் மகன்மாரிமுத்து. இவர் லாட்ஜ் ஒன்றில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி ஜெயா.

45 வயதான பாண்டியனுக்கு, 21 வயதான மருமகள் ஜெயா மீது காமவெறி பிறந்தது.மகன் வீட்டில் இல்லாத சமயத்தில் மருமகளை சீண்டி வந்தார். ஒரு கட்டத்தில்ஜெயாவை அனுபவிக்க முயற்சித்தார்.

அவரிடமிருந்து தப்பிய ஜெயா, தனது கணவர் மாரிமுத்துவிடம், மாமனாரின்தொல்லை குறித்து கூறினார்.

இதையடுத்து தனது வீட்டிலிருந்து வெளியேறிய மாரிமுத்து, எதிர்புறத்தில் ஒருவீட்டை வாடகைக்குப் பிடித்து மனைவியுடன் தங்கினார்.

வீட்டை விட்டு ஜெயா வெளியேறி விட்டாலும் கூட எதிர் வீடடிலேயே அவர்கள்வசித்து வந்ததால் காம வெறி அடங்காமல் எப்படியாவது மருமகளை அனுபவித்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தார் பாண்டியன்.

இந் நிலையில் ஜெயா கர்ப்பம் தரித்தார். அப்படியும் கூட பாண்டியனின் மனதில்மண்டிக் கிடந்த வெறி குறையவில்லை. பலமுறை ஜெயாவை அடைய நினைத்தும்அந்தப் பெண் தப்பி வந்தார்.

இந் நிலையில் 7மாத கர்ப்பிணியான ஜெயாவை அவரது வீட்டு வாசலில் வைத்துகழுத்தில் ஓங்கி வெட்டினார் பாண்டியன். வெட்டு வாங்கிய ஜெயா வீட்டுக்குள்ஓடினார்.

அப்படியும் விடாத பாண்டியன், வீட்டுக்குள் விரட்டிச்செனறு சரமாரியாக வெட்டிக்கொன்றார்.

பின்னர் அங்கிருந்து தப்பியேடிய பாண்டியன் அரிவாளுடன் அல்லிநகரம் போலீஸில்சரணடைந்தார்.

படுகொலை செய்யப்பட்ட ஜெயாவுக்கு வயிற்றில் ஆண் குழந்தை இருந்தது பிரேதபரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+