மாதா அமிர்தானந்த மயி மடத்தில் மகன்-மகள்அடைத்து வைப்பு: தந்தை புகார்!
சென்னை:
பெண் துறவி மாதா அமிர்தானந்த மயி மடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்குமதனது மகள், மகனை மீட்டுத் தரக் கோரி ஈரோட்டைச் சேர்ந்த பொறியாளர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஈரோட்டைச் சேர்ந்த ஞானமுத்து என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளஹேபியஸ் கார்பஸ் மனுவில்,நான் மின்சார வாரியத்தில் பொறியாளராக பணியாற்றுகிறேன். எனது மகன் விஜயசெல்வத்தை (வயது 27) பி.இ படிக்க வைத்தேன். மகள் சந்திரிகாவை பி.காம் படிக்கவைத்தேன்.
இருவரும் கடந்த 1997ம் ஆண்டு காணாமல் போய் விட்டனர். அவர்களைப் பலஇடஙகளிலும் தேடியும் காணவில்லை. இந் நிலையில் கேரளாவில் உள்ள மாதாஅமிர்தானந்த மயி ஆசிரமத்தில் இருவரும் இருப்பதாக தகவல் கிடைத்தது.
அங்கு சென்றுஅவர்களை அழைத்து வர முயற்சி செய்தேன். ஆனால் அனுப்பமுடியாது என்று கூறி ஊழியர்கள் மிரட்டினர். எனது மகன், மகள் விருப்பத்திற்குமாறாக அங்கு அடைத்து வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னிமலை போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிககைஎடுக்கப்படவில்லை. எனவே எனது மகள், மகனை நீதிமன்றம் தான் மீட்டுத் தரவேண்டும் என ஞானமுத்து தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள் சதாசிவம், மணிக்குமார்ா ஆகியோர் அடங்கியபெஞ்ச் இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், சென்னிமலைபோலீஸார், அமிர்தானந்த மயி ஆசிரம நிர்வாகம் ஆகியோருக்கு நோட்டீஸ்அனுப்பஉத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications