நடிகை மாயாவிடம் மார்வாடி செக்ஸ் குறும்பு
சென்னை:
அடுக்கு மாடிக் குடியிருப்பில் கார் நிறுத்துவதறகு ஷெட்அமைத்துத் தரவேண்டுமானால் ரூ. 2 லட்சம் தர வேண்டும், இல்லாவிடடால் ஒரு நாள் இரவுதன்னுடன் படுக்க வேண்டும் என்று மார்வாடி ஒருவர் தனக்கு டார்ச்சர் தருவதாகமுன்னாள் கவர்ச்சி நடிகை மாயா சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார்கொடுத்துள்ளார்.
மாயா சாலிகிராமம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். இவர் மாநகர காவல்துறைஆணையர் அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் கொடுத்தார்.
அதில், கடந்த 1995ம் ஆண்டு நவரத்தின ஜெயின் என்பவரிடம் ஃபிளாட் ஒன்றை ரூ.6 லட்சத்துக்கு வாங்கினேன்.
பணம கொடுத்த பின்னர் அந்த வீட்டை என்னிடம் ஒப்படைக்காமல் வேறுஒருவருக்குக் கொடுத்து விட்டதாக ஜெயின் தெரிவிததார். இதையடுத்து போலிஸில்புகார் கொடுத்தேன். அதன் பின்னர் அந்த வீட்டை என்னிடம் ஒப்படைத்தார்.
வீட்டை வாங்கும் போதே கார்ஷெட் அமைத்துத் தருவதாக ஜெயின் கூறியிருந்தார்.ஆனால் அதன்படி செய்யவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது 2 லட்சம்கொடுத்தால் ஷெட் அமைத்துத் தருகிறேன்.
இல்லாவிட்டால் ஒரு நாள் இரவு என்னுடன் வந்து தங்க வேண்டும் என்று ஆபாசமாககூறுகிறார் என்று புகாரில் கூறியிருந்தார் மாயா.
இந்த புகார் குறித்து விசாரிக்குமாறு வடபழனி உதவிஆணையருக்கு ஆணையர்லத்திகா சரண் உத்தரவிட்டுள்ளார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாயா, ஜெயினின் பேச்சு அத்துமீறிய வகையில்இருந்ததால் தான் புகார் கொடுத்தேன் என்றார்.
ஏன் சினிமாவில் நடிககவிலலை என்று நிருபர்கள் கேட்டபோது, நான் என்னசெய்வது, இன்னும் கூட நான் கிளாமராகத்தான் இருக்கிறேன. ஆனால் யாரும்கூப்பிடத்தான் மாட்டேன் என்கிறார்கள் என்று புன்னகைத்தபடி அங்கலாய்த்துக்கொண்டார்.
காங்கிரஸ் கட்சியில் கொஞ்ச காலம் மாயா இருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.