தமிழக சிறுமிகளை விபச்சாரத்தில் தள்ளிய ஷோபா

Subscribe to Oneindia Tamil

கொச்சி:

தந்திரி விவகாரத்தில் சிக்கிய ஷோபாவின் பின்னணியை ஆராய்ந்து வரும் கேரள போலீசாருக்கு மண்டை காயும்அளவுக்கு பல திகிர் தகவல்கள் கிடைத்து வருகின்றன.

Shoba

தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த ஏழை குடும்பத்தைச் சேர்ந்தசிறுமிகளை கேரளாவுக்கு வரவழைத்து, தனது அழகுநிலையத்தில் வேலைக்குவைத்து, அப்படியே அவர்களை விபச்சாரத்திலும் ஈடுபடுத்தி வந்ததாக ஷோபா மீதுபுதிய புகார் எழுந்துள்ளது.

ஷோபா தனது கணவர் பெயர் ஜான் என்றும், அவர் வெளிநாட்டில் இருப்பதாகவும்போலீஸில் தெரிவித்திருந்தார். ஆனால் ஜான் கொச்சியில்தான இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் இருவருக்கும் இடையேமுறைப்படி திருமணமே நடக்கவில்லைஎன்றாலும் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந் நிலையில் பாபு என்பவரை தனது இரணடாவது கணவர் என்று கூறியுள்ளார்ஷோபா. அவர் தற்போது வெளிநாட்டில் இருக்கிறாராம்.

மேலும் சில போதைப் பொருள் கும்பல்களோடும் ஷோபாவுக்கு தொடர்பு இருப்பதுதெரிய வந்துள்ளது. இந்தக் கும்பல் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு போதை மருந்துசப்ளை செய்ததோடு அதில் பலரை பணத்தாசை காட்டி விபச்சாரத்தில்ஈடுபடுத்தியுள்ளார் ஷோபா.

அந்தப் பெண்களை தான் சொன்ன இடத்தில் வைத்து பணக்காரர்கள்,தொழிலதிபர்களுக்கு தாரை வார்த்துள்ளார். அதை அந்த இடத்தில் ஏற்கனவேபொறுத்தப்பட்ட கேமராக்களில் வீடியோவாக எடுத்து அதைக் காட்டி அந்தப் பெரியமனிதர்களிடமிருந்த பணத்தை கறந்துள்ளார்.

குடும்பப் பெண்களையும் ஷோபா விட்டு வைக்கவில்லை. கேரளாவில் பல வீடுகளில்கணவன்மார்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருவது ஷோபாவுக்குசாதகமாகிவிட்டது. அப்படிப்பட்ட சில வீடுகளை தேர்வு செய்து அந்தப் குடும்பப் பெண்களைமுதலில் அழகு நிலையத்துக்கு வரவழைத்து பழகி அவர்களுக்கும் பணத்தாசை காட்டிவிபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.

மேலும் சில பெண்களுக்கு, தன்னிடம் போதை மருந்து வாங்க வரும் கல்லூரிமாணவர்களை அனுப்பி வைத்து நல்ல காசு பார்த்துள்ளார்.

இதன் உச்சகட்டமாக தமிழக, கர்நாடக, ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த ஏழைக்குடும்ப சிறுமிகள், பெண்களை வேலை வாங்கித் தருவதாக கூறி கேரளாவுக்குபல்வேறு ஏஜென்டுகள் மூலம் வரவழைத்துள்ளார் ஷோபா.

அங்கு கொண்டு போகப்பட்ட சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.

இவ்வளவு பெரிய வேலைகளை ஷோபாவும் சிலரும் மட்டும் செய்திருக்க முடியாது.இதன் பின்னணியில் பெரிய நெர்வோர்க்கே இருக்க வேண்டும். டிப் ஆப் த ஐஸ்பெர்க் மாதிரி இதில் ஷோபா ஒரு சிறிய புள்ளி தான் என்கிறார்கள்.

இதையடுத்து ஷோபாவுடன் தொடர்பு வைத்திருந்த முக்கியப் புள்ளிகள்,அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், போலீஸ் அதிகாரிகளையும் குறி வைத்துள்ளனர்இந்த வழக்கை விசாரிக்கும் போலீசார்.

இந் நிலையில் ஷோபாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது. சிறையில் உள்ள ஷோபாவுக்கு எர்ணாகுளம்நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+