மாவிலாறு அணையை திறந்தனர் புலிகள்:குண்டுவெடிப்பில் டக்ளஸ் கட்சி பிரமுகர் படுகாயம்
கொழும்பு:
கடந்த 3 வாரங்களாக இலங்கையில் நடந்து வரும் கடும் சண்டைக்கு வித்திட்டமாவிலாறு அணையின் மதகுகளை விடுதலைப் புலிகள் நேற்று மாலை திறந்துவிட்டனர்.
திரிகோணமலையில் மாவிலாறு தடுப்பணையின் மதகுகளை விடுதலைப் புலிகள்மூடியதால் சிங்கள கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் பாசன வசதி கடுமையாகபாதிக்கபபடடது.இதையடுதது விடுதலைப புலிகள் மீது ராணுவம் கடும் தாக்குதல் தொடங்கியது.புலிகளும் கடுமையான பதிலடி கொடுத்தனர்.
சண்டைமுற்றி வந்ததால் நார்வே தூதர் பாயர் கொழும்பு வந்தார். விடுதலைப புலிகள்அமைப்பின் தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதையடுத்து மதகுகளை திறந்துவிட புலிகள் சம்மதித்தனர்.
ஆனால இதை இலங்கை அரசு ஏற்கவில்லை. விடுதலைப் புலிகள் அணைப்பகுதியிலிருந்து விலக வேண்டும், புலிகளுடன் ஒப்பந்தம் செய்ய நார்வேவுக்குஉரிமையில்லை என்றது.
ஆனால் புலிகள்அதை ஏற்கவில்லை. இந் நிலையில செவ்வாய்க்கிழமை மாலை5.30மணியளவில் அணையின் மதகுகளை புலிகள் திறந்து விட்டனர். நார்வேதூதுக்குழுவின் வேண்டுகோளை ஏற்று மதகுகளை திறந்து விட்டதாக புலிகள்தெரிவித்துள்ளனர்.
முன்னாள் தமிழ் எம்.பி. படுகாயம்:
இதற்கிடையே, கொழும்பு நகரில் நடந்த கார் வெடிகுண்டுத் தாக்குதலில்முன்னாள்தமிழ் எம்.பி. சிவதாசன் படுகாயமடைந்தார்.
அவரது மெய்க்காப்பாளர் உள்ளிட்ட 4 பேர் பலியானார்கள். 7 பேர்படுகாயமடைந்தனர். கொழும்பு நகரின் பம்பலப்பிட்டியா என்ற இடத்தில், மக்கள்நடமாட்டம் அதிகம் உள்ள செயின்ட் பால்ஸ் கல்லூரி அருகே இந்த குண்டு வெடிப்புநிகழ்ந்தது.
இதில், 3 வயது குழந்தை உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். சிவதாசன் உள்ளிட்ட 7பேர் படுகாயம் அடைந்தனர். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர் சிவதாசன்.
விடுதலைப் புலிகளின் தீவிர எதிர்ப்பாளராக விளங்கி வருகிறார். ராஜபக்ஷேவின்கூட்டணியில் இடம் பெற்றுள்ளார். அவரைக் குறி வைத்தே இந்தத் தாக்குதல்நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.