ஐயப்பன் கோவிலில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும்: மதுரை ஆதீனம்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் வந்த மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசுகையில், வயது வித்தியாசமின்றி அனைத்துபெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனுமதிக்க வேண்டும். கடவுளுக்கு முன் அனைவரும் சமம்.எனவே சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்.

சபரிமலை தந்திரியை அப்பதவியிலிருந்து நீக்கியது துரதிர்ஷ்ட வசமானது. அதேசமயம் தந்திரி தொடர்பாகவெளியாகும் செய்திகளும் வருத்தம் தருகிறது.

பணம் கொடுத்து கடவுளை தரிசிக்கும் முறை மிகவும் தவறானது. கடவுளுக்கு முன்பு அனைவரும் ஒன்றுதான்.எனவே இந்த முறையை ரத்து செய்ய வேண்டும். அனைவரும் ஒரே மாதிரி கடவுளை தரிசிக்க வழி செய்யவேண்டும்.

மதமாற்றததைத் தடுக்க சட்டம் கொண்டு வருவது தான் ஒரே வழி. திருப்பதி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்ஒருவர் மதமாற்ற பிரசாரங்களை மேற்கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விசாரிக்கவேண்டும். கல்வி நிறுவனங்கள் மதமாற்ற களங்களாக மாறுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

சிதம்பரம் கோவிலில் தேவாரம், திருவாசகம் பாட அனுமதி மறுக்கப்படுவது வேதனையை அளிக்கிறது.அனைத்து சாதியினரும் நடராஜர் கோவிலில் தேவாரம், திருவாசகம் பாட அனுமதிக்க வேண்டும் என்றார்ஆதீனம்.

இதைத்தொடர்ந்து சங்கரமடத்திற்கும் ஆதீனம் சென்றார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆதீனம்சங்கர மடத்திற்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது. ஜெயேந்திரரை ஆதீனம் சந்தித்துப் பேசினார். பின்னர்ஜெயேந்திரரின் 72வது பிறந்த நாள்விழாவிலும் ஆதீனம் கலந்து கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+