ஆலப்புழா படகுப் போட்டிக்கு தீவிரவாதிகள் மிரட்டல்!
Subscribe to Oneindia Tamil
ஆலப்புழா:
கேரள மாநிலம் ஆலப்புழாவில் இன்று பிற்பகல் நடைபெறும் படகுப் போட்டியைசீர்குலைக்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக வந்த செய்தியைத் தொடர்ந்துஆலப்புழாவில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆலப்புழாவில் ஆண்டு தோறும் படகுப் போட்டி நடைபெறும். மிக நீளமானபடகுகளில் போட்டியில் கலந்து கொள்வோர், இதில் வெற்றி பெறவதை மிகவும்கவுரமாக கருதுகிறார்கள். கேரள மாநிலத்தவர் மட்டுமே இதில் வழக்கமாகபங்கேற்பார்கள்.இந்த ஆண்டு முதல்முறையாக வெளிநாடுகளைச் சேர்ந்த 10 பெண்களும் கலந்துகொள்கின்றனர். மொத்தம் 60 படகுகளில் 3000 வீரர், வீராங்கனைகள் போட்டியில்கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில் படகுப் போட்டியை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டம்தீட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து போட்டி நடைபெறும்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1000க்கும் மேற்பட்ட போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் தொடங்கும் போட்டியை கேரள முதல்வர் அச்சுதானந்தன் தொடங்கிவைக்கிறார்.












Click it and Unblock the Notifications