மைனர் பெண்ணைக் கடத்திக் கல்யாணம்: பைனான்சியருக்கு முன்ஜாமீன் மறுப்பு
சென்னை:
16 வயது மைனர் பெண்ணான கரோலினைக் கடத்திச் சென்று, கற்பழித்து, பின்னர்வலுக்கட்டாயமாக கல்யாணம் செய்தாதக குற்றம் சாட்டப்பட்டுள்ள பைனான்சியர்கோவி. கண்ணனுக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னையைச் சேர்ந்த திரைப்பட பைனான்சியர் கோவி.கண்ணன், 16 வயதுபெண்ணான கரோலினை கடத்திச் சென்று, மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்ட அருகேவீட்டில் அடைத்து வைத்து பலமுறை கற்பழித்து பின்னர் கட்டாயக் கல்யாணம் செய்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.அவருடைய செயல்களுக்கு துணை போனதாக நான்கு போலீஸார் ஏற்கனவேசஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கோவி.கண்ணன் தலைமறைவாகி விட்டார். இந்தநிலையில், முன்ஜாமீன் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.
அந்த மனு நேற்று நீதிபதி பாட்ஷா முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. அப்போதுகரோலினுக்கு ஆதரவாக அகில இந்திய முற்போக்கு பெண்கள் இயக்கம் சார்பில்வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகியிருந்தார்.
அரசுத்தரப்பு, கரோலின் தரப்பு, பெண்கள் இயக்கம் மற்றும் கோவி. கண்ணன் தரப்புவக்கீல்களின் வாதத்தை நீதபதி கேட்டார். கோவி.கண்ணன், கரோலினை மணந்தபோது எடுத்த புகைப்பட ஆல்பமும் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்தப் புகைப்படங்களைப் பார்த்த நீதிபதி, பெண்ணின் முகத்தில் திருமணக் களையேஇல்லையே, ஒரு விரக்திதான் அத்தனை படங்களிலும் தெரிகிறது என்றார்.
பின்னர் இந்த வழக்கில்போலீஸ் அதிகாரிகள் பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். இவர்கள்தற்காலிக பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகவும் உள்ளனர்.மனுதாரர் மீது மிகக் கடுமையான குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
16 வயதுப் பெணணை 42 வயதுக்காரர் கடடாயத் திருமணம் செய்தார் என்பதுகடுமையான குற்றச்சாட்டு. மனுதாரரும் தலைமறைவாக உள்ளார்.
விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளது. இன்னும் முழுமை பெறவில்லை. எனவேமனுதாரரை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியமாகிறது.உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளதால் மனுதாரரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications