இலங்கை இந்து தமிழர்களைத் தாக்கும் கியாத்துப் படை

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்:

இலங்கையில் இந்து தமிழர்களைத் தாக்க கியாத்துப் படை என்ற பெயரில் முஸ்லீம்தமிழ் இளைஞர்களைக் கொண்ட புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகஇலங்கையிலிருந்து தப்பி வந்துள்ள அகதிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் சண்டை மீண்டும் வலுத்து வருவதால், அங்கிருந்து அகதிகளாகதமிழகம் வரும் அகதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.வியாழக்கிழமை 206 அகதிகள் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

இலங்கையிலிருந்து தப்பி வரும் அகதிகள் அங்கு நடக்கும் கொடுமைகளை கண்ணீர்மல்க தெரிவிக்கின்றனர். பரந்தாமன் என்ற அகதி கூறுகையில், இலங்கையில்இப்போது தமிழர்களிடையே கூட பிளவு ஏற்பட்டு விட்டது.

இந்து மதத்தைச் சேர்ந்த தமிழர்களை தாக்க தமிழ் முஸ்லீம் இளைஞர்களைக் கொண்டகியாத்துப் படை என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுதிரிகோணமலையில் ஒருசிலை நிறுவுவதில் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்துகியாத்துப் படை தொடங்கப்பட்டது.

சமீபத்தில் மூதூர்-திரிகோணமலை இடையே சென்ற ஒரு பேருந்தை நிறுத்தி நான்குஇந்து தமிழர்களை கியாத்துப் படையினர் சுட்டுக்கொன்றனர். அப்போது நான்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களை திரிகோணமலை அரசு மருத்துவமனைக்குக்கொண்டு சென்றபோது அவர்களை உள்ளே அனுமதிக்க அங்கிருந்த சிங்களபோலீஸார் மறுத்து விட்டனர்.

இதேபோல மூதூரில் புதுமணத் தம்பதியையும் கியாத்துப் படையினர் சில நாட்களுக்குமுன்பு சுட்டுக் கொன்றனர். கியாத்துப் படையினர் குறி வைத்துத் தாக்கத்தொடங்கியுள்ளதால் இந்துத் தமிழர்கள் வேலைகளுக்குப் போவதற்கு அஞ்சும் நிலைஏற்பட்டுள்ளது.

முதலில் சிங்கள ராணுவத்தைப் பார்த்து அஞ்சினோம், இப்போது தமிழ் முஸ்லீம்களின்கியாத்துப் படையும் எங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றார்பரந்தாமன்.

கியாத்துப் படையினருக்கு இலங்கை அரசு பெரும் ஊக்குவிப்பை அளித்து வருவதாகசசிக்குமார் என்ற தமிழர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+