சென்னை பல்கலை 150வது ஆண்டு விழா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை பல்கலைக் கழகத்தின் 150வது ஆண்டு விழா செப்டம்பர் 4 மற்றும் 5 ஆகியதேதிகளில் நடைபெறுகிறது. இதில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்துகொள்கிறார்.

சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் தியாகராஜன் இதுகுறித்துசெய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 1857ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதிசென்னை பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்,அறிஞர்கள், அரசியல் மேதைகள், குடியரசுத் தலைவர்கள், ஆளுநர்கள், தொழில்துறைநிபுணர்கள் என பல தரப்பட்டவர்களை உருவாக்கியுள்ளது.

இப்படிப் பட்ட பெருமை கொண்ட சென்னை பல்கலைக் கழகம் வருகிற 5ம்தேதியுடன் 150வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை கோலாகலமாககொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

வருகிற 4ம் தேதி 150வது ஆண்டு விழா தொடங்குகிறது. தமிழக ஆளுநர் பர்னாலாதலைமை தாங்குகிறார். குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராகபங்கேற்கிறார். முதல்வர் கருணாநிதி, மத்திய, மாநில அமைச்சர்கள்பங்கேற்கவுள்ளனர்.

ரூ. 6 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ள செனட் இல்லம் நிகழ்ச்சியின் போதுதிறந்து வைக்கப்படுகிறது. அப்துல் கலாம் இதை திறந்து வைக்கிறார். மேலும்,மாணவ, மாணவியருடன் அவர் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

இதே நிகழ்ச்சியின் போது, திராவிட இயக்க ஆய்வு மையத்தை முதல்வர் கருணாநிதிதொடங்கி வைக்கிறார்.

பல்கலைக்கழக 150வது ஆண்டு விழாவையொட்டி முன்னாள் மாணவரும், திரைப்படபாடலாசிரியருமான வைரமுத்து சிறப்புப் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இதுநிகழ்ச்சியில் பாடப்படும். ஓராண்டுக்கு இந்த விழா கொண்டாட்டங்கள் நீடிக்கும்.

மேலும் 150வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில், பெருங்குடி, கேளம்பாக்கம்,முட்டுக்காடு ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றில் 150 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்துகொடுத்தால் அதை ஒதுக்குவது குறித்து பரிசீலிப்பதாக தமிழக அரசுஉறுதியளித்துள்ளது. அங்கு புதிய வளாகம் ஒன்றுஅமைக்கப்படும் என்றார்தியாகராஜன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+