இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இன்று முதல் போர் நிறுத்தம்!
பெய்ரூட்:
கடந்த ஒரு மாதமாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வந்த கடும் தாக்குதல் இன்றுடன்ஓய்கிறது. இஸ்ரேல் படையினரும், ஹிஸ்புல்லா அமைப்பினரும் இன்றுமுதல் போர்நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர்.
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த ஐ.நா.சபை கடுமையாக முயற்சித்துவந்தது. இதன் விளைவாக போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானம் 2 நாட்களுக்குமுன்பு ஐ.நா. பாதுகாப்புசபையில் போர் நிறுத்த தீர்மானம் ஒருமனதாகநிறைவேற்றப்பட்டது.இத்தீர்மானத்தை இஸ்ரேல், லெபனான், ஹிஸ்புல்லா ஆகியோர் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டு அமைச்சரவைகள் கூடி தீர்மானத்திற்குஒப்புதல் கொடுத்தன. இதன் விளைவாக இன்று காலை 8மணிக்கு (இந்திய நேரப்படிகாலை 10.30மணிக்கு) போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது.
போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும் கூட உடனடியாக லெபனானிலிருந்து இஸ்ரேல்படைகள் விலகாது என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லைப்பகுதியில், லெபனான் ராணுவம் பாதுகாப்புப் பணியை ஏற்கும் வரையில், இஸ்ரேல்ராணுவம் அங்கிருந்து விலகாது என்று இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
லெபனான் மீதான சண்டைக்காக இஸ்ரேல் இதுவரை ரூ 22,545 கோடியைசெலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.