வேலூர், ஈரோடு, தஞ்சை-மாநகராட்சிகளாகுமா?
கடலூர்:
உள்ளாட்சித் தேர்தலில் சுழற்சி முறை மாற்றப்பட உள்ளதால் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி தேர்தலில் மாற்றம்வரலாம் என உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
தலித்களை தலைவர்களாகக் கொண்ட இந்த இரு பஞ்சாயத்துகளிலும் பல ஆண்டுகளாக தேர்தல் நடத்த முடியாதநிலை உள்ளது. அப்படியே தேர்தல் நடந்தாலும் தலித்களால் தலைவர் பதவியில் நீடிக்க முடியாத அளவுக்கு இந்தகிராமங்களில் இன்னொரு ஜாதியினரின் எதிர்ப்பு உள்ளது.இந் நிலையில் கடலூரில் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை வளர்ச்சி பணிகள் குறித்துஅதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஸ்டாலின் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,
கடலூரில் மின்சார சுடுகாடு, பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். கடலூர், சிதம்பரம் நகரங்களில்அனைத்து வசதி கொண்ட இறைச்சிக் கூடம் அமைக்கப்படும். திருப்பூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், ஈரோடு, தஞ்சாவூரையும் மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது.ஆய்வுக்கு பின் இதுபற்றி முடிவெடுக்கப்படும்.
வரும் உள்ளாட்சி தேர்தலில் சுழற்சி முறை மாற்றப்படுவதால், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டிக்கு தேர்தலில் மாற்றம்வரலாம். வீராணத்தில் இருந்து ஆழ்துளைக் கிணறு மூலம் தண்ணீர் எடுப்பதால் அப்பகுதிகளில் ஏதாவது பாதிப்புஏற்பட்டுள்ளதா என கண்டறிய குழு அமைக்கப்படும்.
புதிய வீராணம் திட்ட முறைகேடுகளுக்கு அதிகாரிகளே காரணம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். உள்ளாட்சித்துறை அமைச்சர் தான் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்துக்கும் பொறுப்பாவார். எனவே அதிகாரிகள் மீது பழிபோடுவது நியாயமல்ல என்றார் ஸ்டாலின்.