For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலவச கலர் டிவி பெட்டிகள் அனுப்பும் பணி தொடங்கியது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசின் சார்பில் செப்டம்பர் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ள இலவச கலர் டிவி திட்டத்தின்மூலம் விநியோகிக்கப்படவுள்ள கலர் டிவி பெட்டிகளை மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.

தமிழக அரசின் சார்பில் இலவச கலர் டிவி வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாள் முதல்அமலுக்கு வருகிறது. முதல் கட்டமாக 30,000 கலர் டிவி பெட்டிகள் வழங்கப்படவுள்ளன.

இந்த டிவி பெட்டிகள் தயாரிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. 14 இஞ்ச்அளவிலான இந்தப் பெட்டிகளில் தமிழக அரசின் கோபுர சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. டிவியுடன் சேர்த்துஆண்டனா, ரிமோட் கண்ட்ரோல் கருவி ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது.

சேலத்திற்கு 453 டிவி பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 300 டிவிகளும்,தர்மபுரியில் 364 டிவிகளும், நாமக்கல்லில் 280 பேருக்கும், நெல்லை மாவட்டத்தில் 600 பேருக்கும்,கன்னியாகுமரியில் 193 பேருக்கும் டிவி வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 600 டிவிகள் வழங்கப்படுகின்றன. கோவையில் 600 பேரும், நீலகிரியில் 8000பேரும், விழுப்புரத்தில் 600 பேரும் இலவச டிவியைப் பெறவுள்ளனர்.

மதுரை மாவட்டத்திற்கு 200 டிவிகளும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 600 பேரும், திருச்சியில் 990 பேரும்,தஞ்சையில் 489 பேரும், கரூரில் 500 பேரும், நாகையில் 338 பேரும், திருவாரூரில் 540 பேரும்,புதுக்கோட்டையில் 600 பேரும் இலவச டிவியைப் பெறவுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X