அதிமுக ஆட்சியில் தொழிற்துறை புரட்சி-ஜெயகுமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக ஆட்சியில் தான் தொழில்துறையிலும், தகவல் தொழில்நுட்ப துறையிலும் மிகப் பெரிய புரட்சி ஏற்பட்டதுஎன அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் கூறினார்.

சட்டசபையில் தொழிற்துறை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது,

அதிமுக ஆட்சியில் தொழில்துறையிலும், தகவல் தொழில்நுட்ப துறையிலும் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டது.மத்திய அரசு வெளியிட்ட இடைக்கால புள்ளியியல் அறிக்கையில் தொழில் துறையில் 2005ம் ஆண்டு தமிழ்நாடுமுதலிடத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சுமார் 98.66 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. வேலை வாய்ப்பில் தமிழகம் 2வதுஇடத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ. 18,000 கோடி மதிப்பில்சென்னை நகரில் சாலைகள், மேம்பாலங்கள், பூங்காக்கள் அமைக்கவும், குடிநீர் வசதி பெருக்கவும் திட்டம் தீட்டிசெயல்படுத்தப்பட்டது.

அம்மாவின் தொழில் கொள்கையால் தான் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் இந்திய தரக் கட்டுப்பாட்டுசெயலகத்தின் ஐஎஸ்ஓ 901-2002 என்ற சான்றிதழை பெற்றது. மின் உற்பத்திக்கான திட்டங்களையும் அதிமுகஆட்சி செயல்படுத்தியது.

ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைந்த விலையில் கார் தொழிற்சாலை ஒன்றை ரத்தன் டாடா நிறுவத்தினர் தமிழ்நாட்டில்அமைப்பதற்கு அம்மாவை சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தனர். அப்போது தேர்தல் சுற்றுப்பயணத்தில்இருந்ததால் பேச இயலவில்லை.

ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த தொழிற்சாலை மேற்கு வங்காளத்துக்கு போய் விட்டது. அம்மாஆட்சியில் தொழில் தொடங்குவது ஒரு குழந்தை பெற்ற தாயிடம் வளர்வது போல, திமுக ஆட்சியில்தொடங்குவது குழந்தை மாற்றாந்தாயிடம் வளர்வது போல என்றார் ஜெயக்குமார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி வளர்ப்பு மகன் போல என்று கூறியதை திமுகவினர் மேஜைத்ைதட்டி வரவேற்றனர்.

தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், பெற்ற தாய்க்கும் மாற்றாந்தாயிக்கும் உள்ள வித்தியாசம் தொழில்அதிபர்களுக்கும் தெரியும், தமிழக மக்களுக்கும் புரியும்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி: இந்த ஆட்சி வந்த பிறகு பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடுசெய்ய முன் வந்திருப்பது தான் உண்மை. அதிமுக ஆட்சியின் போது பல நிறுவனங்கள் தொழில் தொடங்கதயாராக இருந்தும் அதற்கு வாய்ப்புகள் வழங்கப்படாததால் அவர்கள் கர்நாடகா, ஆந்திரா என்றுபோய்விட்டார்கள் அதுதான் உண்மை.

திமுக ஆட்சி வந்தபிறகு நோக்கியா, மோட்டரோலா போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில்தொடங்க முன்வந்தன. வெளிநாட்டில் இருக்கும் தொழில் அதிபர்கள் ரூ. 1,000 கோடி செலவில்தொழிற்சாலைகள் தொடங்க முன் வந்திருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்நிய முதலீடுகளும் புதியதொழிற்சாலைகளும் அதிக அளவில் தமிழ்நாட்டை தேடி வருகிறது என்பது தான் உண்மை எனறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+