லெபனான்: இந்திய ராணுவத்திறகுப் பாராட்டு
டெல்லி:
லெபனானில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவப் பிரிவுக்கு பாராட்டு கிடைத்துள்ளது.
போரால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு லெபனானின் கிழக்குப் பகுதியில் இந்திய ராணுவத்தின் 4வது சீக்கிய பிரிவுஅமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஐ.நா. அமைதி காக்கும் படையின் கீழ் இந்திய வீரர்கள்செயல்பட்ட வருகின்றனர். இந்தப் படைப் பிரிவின் பணிகள் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கு இடையே நடந்த கடும் சண்டையில் இப்பகுதி கடுமையாகபாதிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் இந்திய ராணுவத்தின் சீக்கியப் பிரிவு அமைதி காக்கும் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
21 அதிகாரிகள், 8 இளநிலை அதிகாரிகள், 44 வீரர்கள் இப்பிரிவில் இடம்பெற்றுள்ளனர். கடந்த இரண்டுஆண்டுகளாகவே இப்பிரிவு இங்கு நிலை கொண்டுள்ளது. தொடர்பான செய்திகள்பு கூர்க்கா பிரிவு அமைதி காக்கும்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
இப்பிரிவின் செயலை பாராட்டி இப்பகுதியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா. அமைதி காக்கும்படையிைன் தலைவராக செயல்பட்டு வரும் பிரான்ஸ் நாட்டின் மேஜர் ஜெனரல் அலைன் பெல்லக்ரினி பாராட்டுசான்றிதழ் அளித்துள்ளார்.
மேலும், 29ம் தேதி லெபனான் வரும் ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னானும் இந்தியப் படைப் பிரிவைநேரில் சந்தித்து பாராட்டு தெரிவிக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications