டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார் மோதி5 பேர் பலி- சிபிஐ அதிகாரியும் சாவு
திருப்பத்தூர் (சிவகங்கை):
ஓடிக் கொண்டிருந்தபோது டயர் வெடித்தால் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டில்சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் 5 பேர் பலியாயினர். மேலும் காரில்இருந்த சிபிஐ அதிகாரியும் பலியானார்.
பெங்களூரை சேர்ந்த சிபிஐ அதிகாரி சுப்பிரமணியம். திருமயத்தில் நடந்த தனதுஉறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை மதுரை வந்தார்.அங்கிருந்து வாடகை காரில் திருமயம் சென்று கொண்டிருந்தார்.எஸ்.எஸ்.கோட்டை என்ற ஊர் அருகே சென்றபோது காரின் டயர் வெடித்தது.இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடி ரோட்டில் நின்று கொண்டிருந்தவர்கள் மீதுமோதி கவிழ்ந்தது.
இதில் கட்டையன், அவரது மகன் பாண்டி, பேச்சியம்மாள், மாயழகு, வெள்ளைச்சாமிஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மேலும் காரில் இருந்த சுப்பிரமணியமும் உயிரிழந்தார். காரை ஓட்டிய ஆறுமுகம்என்பவர் உள்பட மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாலையில்நடந்து சென்று பலியான 5 பேரும் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்றுகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications