ராமதாஸ் Vs
திருநெல்வேலி:
காங்கிரஸ் தலைவர்களை ராமதாஸ் குற்றம் சாட்டிப் பேசினால், காங்கிரஸ் சும்மா இருக்காது என அந்தக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணியே பெரும் வெற்று பெறும்.
பிற்படுத்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டுக்காக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் வீரப்ப மொய்லியும்பாடுபட்டு வருகின்றனர். அவர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் குறை கூறியிருப்பது அவரது சொந்தக்கருத்தாகும் (கிருஷ்ணசாமியும் ராமதாசும் சம்பந்திகள் என்பது குறிப்பிடத்தக்கது)
காங்கிரஸ் தலைவர்களை அவர் குற்றம் சாட்டிப் பேசினால், காங்கிரஸ் சும்மா இருக்காது. பிற்படுத்தப்பட்டமக்களுக்காக காங்கிரசும் குரல் கொடுத்தே வருகிறது.
ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தேர்தலுக்கு முன்பும் நாங்கள் திமுகவிடம் கேட்கவில்லை, தேர்தலுக்குப்பின்பும் கேட்கவில்லை. அதே நேரத்தில் ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும் என்று தொண்டர்கள்விரும்புகிறார்கள். இது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் கூட்டணி தர்மத்துக்கு குந்தகம் வராமல் பார்த்துக் கொள்வோம். தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைஅமைக்க தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
சரியாக வேலை செய்யாத மாவட்டத் தலைவர்களை உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே மாற்றிவிட்டு வேறுதலைவர்களை நியமிக்கவுள்ளோம். கோஷ்டிப் பூசலை தடுக்க மேலிடம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறதுஎன்றார்.












Click it and Unblock the Notifications