விஜய்காந்துக்கு சபாநாயகர் கண்டனம்
சென்னை:
சட்டசபையில் தனக்கு பேச போதிய நேரம் ஒதுக்கவில்லை என்று விஜய்காந்த் கூறியுள்ளதை சபாநாயகர்ஆவுடையப்பன் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:சட்டசபையில் விவாதங்கள்-உறுப்பினர்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற நடவடிக்கைகளை நான் எடுத்துவருகிறேன். எதிர்க் கட்சியினருக்கு ஆளும் கட்சியினரை விட அதிக நேரம் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சிலர் பத்திரிக்கைகளில் அதிக நேரம் பேச வாய்ப்பளிக்கவில்லை என்று பேட்டி கொடுத்துள்ளனர். இதுஉண்மைக்குப் புறம்பானது.
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் விஜய்காந்த் மே மாதம் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்தீர்மானத்தின் மீது 8 நிமிடமும், ஜூலை மாதம் பட்ஜெட் மீதான விவாதத்தில் 19 நிமிடமும், ஆகஸ்ட் 4ம் தேதிமானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் 17 நிமிடமும், 11ம் தேதி 17 நிமிடமும், 17ம் தேதி 5 நிமிடமும்பேசியிருக்கிறார்.
ஒரே கட்சியில் ஒரே ஒரு உறுப்பினர் இருந்தாலும் அவருக்கு 1 மணி நேரம் 3 நிமிடம் பேச அனுமதிக்கப்பட்டது.ஆனால், 94 உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் கட்சிக்கு மொத்தமே 12 மணி நேரம் 30 நிமிடம் தான்ஒதுக்கப்பட்டது.
சட்டமன்றத்தில் ஆளும் கட்சியினரை விட எதிர்க் கட்சியினருக்கே பேச அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.எனவே தேவையில்ாலமல் வாய்ப்பு வழங்கவில்லை என்பது போன்ற தவறான பேட்டிகளை தவிர்க்க வேண்டும்என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications