நான் வகிப்பது ஆதாயம் தரும் பதவியல்ல-அன்புமணி
டெல்லி:
நான் வகிக்கும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத் தலைவர் பதவி ஆதாயம்தரும் பதவி அல்ல என்று தேர்தல் ஆணையத்திற்கு மத்திய சுகாதாரத்துறைஅமைச்சர்அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
அண்புமணி வகிக்கும் மருத்துவ விஞ்ஞானக்கழக தலைவர் பதவி ஆதாயம் தரும்பதவியாகும். எனவே அவரது எம்.பி பதவியை பறிக்க வேண்டும் என்று கோரிதேர்தல் ஆணையத்திற்குப் புகார் அனுப்பப்பட்டுள்ளது.இந்தப் புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு அன்புமணிக்கு தேர்தல் ஆணையம்உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அன்புமணி அனுப்பியுள்ள பதிலில்,
நான் வகிககும் பதவி ஆதாயம் தரும் பதவி அல்ல. சுகாதார அமைச்சராகஇருப்பவர்கள்தான் இந்தப் பதவியை வகிக்க முடியும். நான் மட்டுமல்ல, யார் சுகாதாரஅமைச்சராக இருந்தாலும் அவர்கள்தான் மருத்துவ விஞ்ஞானக் கழகத் தலைராகவும்இருக்கமுடியும்.
எனவே என் மீதான இந்தப் புகாரை பரிசீலிக்க வேண்டிய அவசியமே இல்லை.எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் எனறு கூறியுள்ளார் அன்புமணி.
ஏற்கனவே இதே பிரச்சினைக்காக மருத்துவ விஞ்ஞானக் கழக இயக்குனர்டாக்டர்வேணுகோபால், டெல்லி உயர்நீதிமன்றத்தில் அன்புமணிக்கு எதிராக வழக்குதொடர்ந்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications