அந்தமானில் சிக்குன்குனியா: கொசு ஒழிப்பு தீவிரம்
Subscribe to Oneindia Tamil
போர்ட்பிளேர்:
![]() |
அந்தமான், நிககோபார் தீவுகளில் சிக்குன்குனியா காய்ச்சல் மிக வேகமாகப் பரவிவருகிறது. இதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் வடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
நாடுமுழுவதும் பரவி வரும் சிக்குன்குனியா காய்ச்சல் அந்தமான், நிக்கோபார்தீவுகளையும் விடவில்லை. தலைநகர் போர்ட்பிளேரில் இந்தக் காய்ச்சலால்பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதைத் தொடர்ந்து தீவு நிர்வாகம் சிக்குன் குனியாவை பரப்பும் கொசுக்களைஅழிககும் பணியை முடுக்கி விட்டுள்ளது. இதுகுறித்து அந்தமான், நிக்கோபார்தீவுகளின் சுகாதாரப் பணி இயக்குனர் சதாசிவம் கூறுகையில்,
பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால்தான் சிக்குன்குனியா பரவுகிறது. மேலும்இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் தும்மல் மூலமும் பிறருக்கு பரவுகிறது.நிலைமை மோசமாகி வருவதைத் தொடரந்து தீவிர முன்னெச்சரிக்கை மற்றும் நோய்பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பாதிக்கப்ட்டவர்களுக்குஉரிய சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, கொசுக்களைஅழிக்கும் பணியும்தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நோயைக் கட்டுப்படுத்தத் தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளன என்றார்சதாசிவம்.













Click it and Unblock the Notifications