அமைச்சரின் விமான லீலை-டிவி நடிகையிடம்கேரள பெண் ஐஜி ரகசிய விசாரணை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
![]() |
கேரள பொதுப் பணித்துறை அமைச்சர் ஜோசப் மீதான செக்ஸ் சில்மிஷ புகார்தொடர்பாக சென்னையில் முன்னாள் டிவி நடிகை லட்சுமி கோபகுமார் மற்றும் அவரதுகணவரை ரகசிய இடத்திற்கு வரவழைத்து கேரள ஐஜி சந்தியா தீவிர விசாரணைநடத்தி வருகிறார்.
சென்னையிலிருந்து கொச்சி சென்ற கிங்பிஷர் விமானத்தில் பயணம் செய்தலட்சுமியிடம், அவரது பின் இருக்கையில் அமர்ந்திருந்த அமைச்சர் ஜோசப் கையைவிட்டு சில்மிஷம் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக கேரள பெண் ஐஜி சந்தியா விசாரணை நடத்தி வருகிறார்.விசாரணையின ஒரு பகுதியாக நேற்று அவர் சென்னை வந்தார். நுங்கம்பாக்கம்ஸ்டெர்லிங் சாலையில் உள்ள லட்சுமியின் வீட்டிற்கு சென்று அவர் விசாரணைநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சந்தியா அங்கு வரவில்லை.இந்த நிலையில் இன்று காலை முதல் லட்சுமியின் வீடு பூட்டிக் கிடக்கிறது. லட்சுமிமறறும் அவரது கணவர் ஆகிய இருவரையும் ரகசிய இடததிற்கு வரழைத்து ஐ.ஜ.சந்தியா விசாரணை நடததி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த விசாரணைக்குப் பின் சென்னை விமான நிலையத்தில் உள்ள கிங் பிஷர் விமானநிறுவன அலுவலகத்திலும் சந்தியா விசாரணை நடத்தவுள்ளார்.














Click it and Unblock the Notifications