இலவச ஐஸ்க்ரீம் சாப்பிட்ட 500 மாணவர்கள் பாதிப்பு!
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
ஐஸ்க்ரீம் நிறுவனம் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கிய ஐஸ்க்ரீமைசாப்பிட்ட 500 மாணவ, மாணவியர் உடல் நலம்பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.
கடலூரைச் சேர்ந்த உள்ளூர் ஐஸ்க்ரரீம் நிறுவனம் ஒன்று தனது தயாரிப்பைபிரபலப்படுத்துவதற்காக கடலூரில் உள்ள பள்ளிகளை அணுகி, அங்கு ஐஸ்க்ரீம்விற்பனையை மேற்கொண்டது. ஒரு ஐஸ்க்ரீம் வாங்கினால் இன்னொன்று இலவசம்என அந்த நிறுவனம் அறிவித்ததால் மாணவ, மாணவியர் போட்டி போட்டுக் கொண்டுஅதற்கான டோக்கன்களை வாங்கினர்.கடந்த 25ம் தேதி முதல்28ம் தேதி இந்த டோக்கன்களுக்கு ஐஸ்க்ரீம்விநியோகிக்கப்பட்டது. இதில் காசு போட்டு வாங்கிய ஐஸ்க்ரீம் ஒன்றும்செய்யவில்லை. ஆனால் இலவசமாக கொடுத்த ஐஸ்க்ரீமை சாப்பிட்ட மாணவ,மாணவியர் 500 பேருக்கு கடுமையான காய்ச்சலும், சளியும் பிடித்துகிக் கொண்டது.
இதையடுத்து மாணவ, மாணவியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்றனர். இப்படிப்பட்ட நிறுவனங்கள் மீது போலீஸார் கடும் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என பெற்றோர்கள் குறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications