தலைமை ஆசிரியர் அடித்து 40 மாணவர்கள் காயம்!
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே பெருமாத்தூர் குடிகாடு என்ற கிராமத்தில், தலைமை ஆசிரியர்அடித்ததில் 40 மாணவ, மாணவியர் காயமடைந்தனர். இதனால் ஊரே கொந்தளித்துப்போயுள்ளது.
பெருமாத்தூர் குடிகாடு என்ற ஊரில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு ஆண்டிகுரும்பலூர் கிராமத்தைதச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்துவருகின்றனர்.இந்தப் பள்ளிக் கூடததில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு உள்ளதாம். மாணவ,மாணவியருக்கு சரியான முறையில் குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதுகுறித்துஅனைவரும் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள்,பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் குடிநீர் கூட இல்லாமல் பள்ளி நடத்துவதாஎன்று முறையிட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் தினேஷ்குமார், திங்கள் கிழமை மாலை4 மணி முதல் 6மணி வரை புகார் கூறிய 40 மாணவ, மாணவிகளை வெயிலில் நிற்கவைத்துள்ளார். பின்னர் பிரம்பால் அடித்துள்ளார். இதற்கு மதிப்பெண் சரியாகஎடுக்கவில்லை, அதனால் தான் இந்தத் தண்டனை என்றும் காரணம் கூறியுள்ளார்.
தலைமை ஆசிரியரின் வெறித்தனமான அடியால், 40 மாணவ, மாணவிகளும்காயமடைந்தனர். காயமடைந்த மாணவ, மாணவியருக்கு அரசு மருத்துவ மனையில்சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால், அந்த ஊரில் பெரும் பரபரப்புநிலவுகிறது.












Click it and Unblock the Notifications