நாடு முழுவதும் கேபிள் டிவி கட்டணம் குறைகிறது!
டெல்லி:
பே சானல்கள் எனப்படும் பணம் கொடுத்து பார்க்கும் தொலைக்காட்சி அலைவரிகளின் கட்டணத்தை ஒருசானலுக்கு தலா ரூ. 5 என மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) அதிரடியாககுறைத்துள்ளது. இதற்கு கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிராய்எச்சரித்துள்ளது.
இதன்மூலம் வீடுகளுக்கு தரப்படும் கேபிள் டிவி இணைப்புகளின் கட்டணம் குறையவுள்ளது. ஒரு சானலுக்கு ரூ.5 என்று கணக்கிட்டு கேபிள் டிவிக்காரர்களுக்குத் தந்தால் போதும்.இந்தியாவில் கட்டண சானல்களை பார்ப்பதற்கு வசதியாக செட் டாப் பாக்ஸ்முறை அமல்படுத்தப்பட்டது.ஆனால் சென்னை நகரில் மட்டும் இந்த முறை அமல்படுத்தப்பட்டது. மற்ற நகரங்களில் மக்கள் எதிர்ப்புகாரணமாக அமல்படுத்தவில்லை.
செட் டாப் பாக்ஸ் முறை வந்த பிறகு விரும்பிய சானல்களை காசு கொடுத்து பார்க்கும் நிலை உருவானது.ஆனால் கட்டண சானல்கள் ஒவ்வொன்றும் அதிக அளவில் கட்டணம் வசூலித்து வருவதால் பொதுமக்கள கடும்பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் கட்டண சானல்களைப் பார்ப்பதை விட இலவச சானல்களே போதும்என்ற மன நிலைக்கு வந்து விட்டனர்.
இந்த நிலையில், கட்டணச்சானல்கள் வசூலிக்கும் கூடுதல் கட்டணத்தைக் குறைக்க டிராய் நடவடிக்கையில்இறங்கியது. ஒவ்வொரு கட்டணச்சானலும், மாதத்திற்கு ரூ. 5 மட்டுமே வசூலிக்க வேண்டும். அதேபோல 30இலவச சானல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். இதற்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 77மட்டுமே வசூலிக்க வேண்டும் என டிராய் அதிரடியாக அறிவித்துள்ளது.
டிசம்பர் 31ம் தேதி முதல் இந்த புதிய கட்டண முறை அமலுக்கு வருகிறது. அன்று முதல் டெல்லி, கொல்கத்தா,மும்பை ஆகிய நகரங்களிலும் செட் டாப் பாக்ஸ் முறை அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
புதியகட்டண முறையைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிராய்எச்சரித்துள்ளது. ஆனால் டிராய் அமைப்பின் இந்த உத்தரவுக்கு தனியார் டிவி நிறுவனங்கள் கடும ஆட்சேபம்தெரிவித்துள்ளன.
சோனி, இ.எஸ்.பி.என், ஸ்டார்ஸ் போர்ட்ஸ் உள்ளிட்ட டிவி நிறுவனங்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,சானலுக்கு 5 ரூபாய் என்பது ஏற்றுக் கொள்ளவே முடியாதது. இதை எதிர்த்து நீதிமன்றத்திற்குப் போகத் தயாராகிவருகிறோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு சானலும் வித்தியாசமான நிகழ்ச்சியைத் தருகிறது. ஆனால் எல்லாவற்றையும ஒரே மாதிரியாகபாவித்து சமமான கட்டணத்தை நிர்ணயிப்பது முட்டாள் தனமானதாகும் என்று ஈ.எஸ்.பி.என். நிறுவன நிர்வாகஇயக்குநர் வெங்கடேஷ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications