அடுத்த ஜனாதிபதி யார்? காங்-கம்யூ மோதல்
டெல்லி:
குடியரசுத் தலைவர் தேர்தலில் கரண் சிங்கை நிறுத்த காங்கிரஸும், ஜோதிபாசுவைநிறுத்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் முடிவு செய்திருப்பதால் இரு கட்சிகளுக்கும்இடையே மோதல் ஆரம்பமாகியுள்ளது.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூலைமாதத்துடன் நிறைவடைகிறது. மீண்டும் ஒரு முறை கலாமை குடியரசுத்தலைவராக்கும் எண்ணம் காங்கிரஸ் கூட்டணி அரசிடம் இல்லை என்றுகூறப்படுகிறது. மேலும் மீண்டும் ஜனாதிபதியாக கலாமும் விருப்பம் காட்டவில்லை.அண்ணா பல்கலைக்கழகத்தில் மீண்டும் பேராசிரியர் பணிக்குத் திரும்ப அவர் முடிவுசெய்துள்ளார்.எனவே புதிய வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. வழக்கமாகதுணை குடியரசுத் தலைவராக இருப்பவர்தான் குடியரசுத் தலைவர் வேட்பாளராகநிறுத்தப்படுவர். சில நேரங்களில் இதில் விதி விலக்காக வேறு யாராவதுநிறுத்தப்படுவர்.
தற்போது துணை குடியரசுத் தலைவராக இருக்கும் பைரான் சிங் ஷெகாவத்,பாஜகவைச் சேர்ந்தவர். ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக முதல்வராக இருந்தவர்.இப்போது அவர் நடுநிலையுடன் செயல்பட்டு வந்தாலும் அவரை ஜனாதிபதியாக்ககாங்கிரஸ் விரும்பவில்லை.
தனது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான டாக்டர் கரண் சிங்கை குடியரசுத் தலைவர்வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காஷ்மீரின் ராஜாவாக இருந்த கரண்சிங்கின் தந்தை தான் அந்த மாநிலத்தை இந்தியாவுடன் இணைத்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இப்போது ராஜ்யசபா எம்.பியாக உள்ள கரண் சிங் பழுத்த காங்கிரஸ்வாதி. கடந்ததுணை ஜனாதிபதி தேர்தலின்போதே அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால்,காங்கிரசின் அந்த முயற்சிக்கு பாஜக ஆதரவு தரவில்லை. இதனால் பைரோன் சிங்ஷெகாவது துணை ஜனாதிபதியானார்.
இந்த முறை கரண் சிங்கை ஜனாதிபதியாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ள நிலையில்மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான ஜோதிபாசுவை அந்தப் பதவிக்கு நிறுத்த கம்யூனிஸ்ட்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
கடந்த காலத்தில் மூன்றாவது அணியின் சார்பில் பிரதமர் பதவியே ஜோதிபாசுவைதேடி வந்தது. ஆனால், அதை அப்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் நிராகரித்துவிட்டன.அதை கம்யூனிஸ்ட்கள் செய்த வரலாற்றுத் தவறு என்று ஜோதிபாசு பின்னர்வர்ணித்தார்.
இப்போது நாடாளுமன்ற சபாநாயகராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தசோம்நாத் சாட்டர்ஜி உள்ளார். அதே போல ஜனாதிபதி பதவிக்கும் தங்களது மூத்ததலைவர் ஜோதிபாசுவை நிறுத்த கம்யூனிஸ்ட்டுகள் முடிவு செய்துள்ளன.
கம்யூனிஸ்டுகளின் ஆதரவோடு ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் இதனால் சிக்கலில்மாட்டியுள்ளது.
கரண் சிங்கை பொது வேட்பாளராக நிறுத்த கம்யூனிஸ்ட் மற்றும் பாஜகவுடன்விவாதம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.