ஈழ பிரச்சினை-சென்னையில் இன்று மதிமுக பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஈழத் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களைக் கண்டித்தும்,ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் சென்னையில் வைகோ தலைமையில்மதிமுக சார்பில் கண்டனப் பேரணி நடைபெறுகிறது.
இலங்கைத் தமிழர்கள் மீதான ராணுவத்தின் தாக்குதலைக் கண்டித்து சமீபத்தில்டெல்லியில் வைகோ தலைமையில் மதிமுக சார்பில் மாபெரும் பேரணியும்,ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து இன்று சென்னையில் இதே பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டமும்,பேரணியும் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு மன்ரோ சிலையிலிருந்து கண்டனப்பேரணி வைகோ தலைமையில் கிளம்புகிறது.
அண்ணா சாலை,வாலாஜா சாலை வழியாக சென்று சேப்பாக்கம் அரசினர் விருந்தினர்மாளிகைமுன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அங்கு வைகோ பேசுகிறார். இந்தபோராட்டத்தில் மதிமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ளவுள்ளதாக மதிமுக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications