சட்டசபையில் அதிக நேரம் பேசிய ஜெ.: சபாநாயகர்
சென்னை:
சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு அதிக நேரம் பேசவாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு புள்ளிவிவரங்களை சபாநாயகர் ஆவுடையப்பன் சபையில் தெரிவித்தார்.ஆவுடையப்பன் பேசுகையில் தெரிவித்ததாவது:
13வது சட்டசபைக் கூட்டத் தொடர் 17.5.2006 அன்று தொடங்கி 31ம் தேதி வரை 9 நாட்களும், 2வது தொடர்22.7.2006 அன்று தொடங்கி 2.9.2006 வரை 31 நாட்களும் நடைபெற்றது. மொத்தம் 40 நாட்கள் கூட்டத் தொடர்நடந்துள்ளது.
அவை நடைபெற்ற மொத்த நேரம் 164 மணி 34 நிமிடம். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது 4 நாட்கள், 11 மணி 56 நிமிடங்களுக்கு விவாதம் நடந்தது. இதில் பேசியவர்கள் 26பேர். ஆளுங்கட்சியைச்சேர்ந்தவர்கள் 5 பேர் பேசிய நேரம் 2 மணி 10 நிமிடம். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 21 பேர் பேசிய நேரம் 9மணி46 நிமிடம்.முதல்வர் கருணாநிதியின் பதிலுரை 1 மணி 4 நிமிடம்.
எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா 27.5.2006 அன்று விவாதத்தில் கலந்து கொண்டு மொத்தம் 33 நிமிடம்பேசினார். இதில் 9 நிமிடம் குறுக்கீடுகள் இருந்தது.
நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்த பொது நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு 6நாட்கள், 53 பேர் 22 மணி 23 நிமிடங்கள் பேசினர். எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, வரவு செலவு திட்டவிவாதத்தில் கலந்து கொண்டு 31.7.2006 அன்று 2 மணி 7 நிமிடம் பேசினார். இதில் குறுக்கீடுகள் 33 நிமிடம்.இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் அதிகமான நேரம் பேச அவருக்கு வாய்ப்பு தரப்பட்டது.
உரிமை மீறல் குறித்து எழுப்பப்பட்ட பிரச்சினைகள் 11, உரிமை மீறலுக்கு அனுப்பப்பட்டவை 6,நிராகரிக்கப்பட்டவை 6. பார்வையாளர்கள் மாடங்களில் அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்கள் எண்ணிக்கை27,969 பேர் என்றார் ஆவுடையப்பன்.












Click it and Unblock the Notifications