குடந்தை தீவிபத்து: 24 பேர் குற்றவாளிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கும்பகோணம் பள்ளிக் கூட தீவிபத்தில் 94 குழந்தைகள் பலியானதற்கு 24 பேர்காரணம் என நீதிபதி சம்பத் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக் கூடத்தின் சத்துணவுக் கூடத்தில் பற்றிய தீபள்ளிக் கூடத்திற்குள் பரவி 94 குழந்தைகள் பரிதாபமாக கருகி இறந்தனர். இந்தசம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி தாளாளர் புலவர் பழனிச்சாமி, தலைமை ஆசிரியைஉள்ளிட்ட 12பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத்தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் கமிஷன் கடந்த அதிமுக ஆட்சியில்அமைக்கப்பட்டது. நீதிபதி சம்பத் கமிஷன் தனது விசாரணையை முடித்து கடந்தஆண்டு ஜூலை 13ம் தேதியே தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து விட்டது.

இந்த அறிக்கை சனிக்கிழமை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சம்பத்தனது விசாரணை அறிக்கையில், இச்சம்பவத்திற்கு காரணமானவர்களாக 24 பேரைகுறிப்பிட்டுள்ளார். இவர்கள் தான் இச் சம்பவத்திற்கு முழுப் பொறுப்பு என்றும் அவர்தெரிவித்துள்ளார்.

வருகைப் பதிவேட்டில் அதிக மாணவர்கள் இருப்பதாக காட்ட வேண்டும்என்பதற்காக வகுப்பறைகளில் அதிக அளவிலான குழந்தைகளை ஆடு, மாடுகளைப்போல பள்ளி நிர்வாகம் அடைத்து வைத்திருந்ததால் தான் இவ்வளவு பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாக நீதிபதி சம்பத் தெரிவித்துள்ளார்.

சத்துணவு மையப் பணியாளர்களின் அஜாக்கிரதையே விபத்துக்கு முக்கியக்காரணம்.மாணவ, மாணவியரின் பாதுகாப்புகுறித்து கொஞ்சம் கவலைப்படாத பள்ளிநிர்வாகம் இதற்கு முக்கிய பொறுப்பேற்க வேண்டும்.

மொத்தம் 24 பேர் மீது இந்த சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் 12 பேர் மீது மட்டுமே இதுவரை நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விசாரணைக் கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+