For Daily Alerts
Just In
2 ஏக்கர் நிலம்-17ம் தேதி முதல் பகிர்ந்தளிப்பு
திருவள்ளூர்:
நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டம் வரும் 17ம் தேதி முதல்அமலாக்கப்படுகிறது. முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 1,000 பேருக்கு தலா 2 ஏக்கர் நிலம்வழங்கப்படவுள்ளது.கச்சூர்மேடு என்ற இடத்தில் இதற்கான நிலத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலத்தைமுதல்வர் கருணாநிதி 17ம் தேதி வழங்கிறார்.
இது குறித்து அமைச்சர் பெரியசாமி நிருபர்களிடம் பேசுகையில்,
திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் முதல்கட்டமாக மொத்தம் 1,000 பேருக்கு இலவச நிலம்வழங்கப்படவுள்ளது. இதில் 200 பேருக்கு முன்பு ஆக்கிரமித்து பயன்படுத்தி நிலங்களும், 300 பேருக்கு தரிசுநிலங்களை பண்படுத்தி பட்டாவும், 500 பேருக்கு புதிதாக தலா 2 ஏக்கர் நிலமும் வழங்கப்படுகிறது என்றார்.
Comments
Story first published: Tuesday, September 5, 2006, 5:30 [IST]