நவாஸ் ஷெரீப்புடன் பிரணாப் முகர்ஜி சந்திப்பு
பாரீஸ்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை, பாரீஸில் மத்திய பாதுகாப்புஅமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேசினார்.
பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாரீஸ் சென்றுள்ளார். அங்குஅவர்தங்கியிருந்த பாரீஸ் ஹில்டன் ஹோட்டலில், முன்னாள் பாகிஸ்தான் பிரதமர்நவாஸ் ஷெரீபும் வந்திருந்தார்.இதை அறிந்த முகர்ஜி, நவாஸ் ஷெரீப்பை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்துப்பேசினார். இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்து வரும் அமைதிப் பேச்சுக்கள்உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் சிறிது நேரம்விவாதித்தனர்.
இதுகுறித்து பின்னர் ஷெரீப் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவுடனானஎனது உறவுகளை புதுப்பித்துக் கொள்ள இந்த சந்திப்பு உதவியாக இருந்தது என்றார்.
முஷாரப் ஆப்கான் பயணம்:
இதற்கிடையே பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் இன்று ஆப்கானில்தான் செல்கிறார். அந் நாட்டு அதிபர் ஹமீத் கர்சாயின் அழைப்பின்பேரில் அங்குசெல்கிறார் முஷாரப்.
ஆப்கானிஸ்தான் தலிபான் ஆட்சியை ஏற்படுத்தியதில் பாகிஸ்தானின் ராணுவத்துக்கும் ஐஎஸ்ஐ உளவுப் பிரிவுக்கும் முஷாரப் போன்ற மூத்த ராணுவத்தினரும்முக்கிய பங்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications