இன்பத்தமிழன் விடுத்த கொலை மிரட்டல்:விசாரிக்க டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
முன்னாள் அதிமுக அமைச்சர் இன்பத்தமிழன் விடுத்த கொலை மிரட்டல் புகார்குறித்து விசாரணை நடத்துமாறு டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் விளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சமூக சேவகர்செண்பகமூர்த்தி. இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார்.அதில், அமைச்சர்ஸ்டாலின் மதுரைக்கு வந்தபோது அவரை கொலை செய்யமுயன்றதாக செய்திகள் வெளியாகின. இந் நிலையில, பழைய விரோதம் காரணமாகஎன்னை அந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்க திமுக உத்தரவின் பேரில் போலீஸார்முயற்சித்து வருவதாக ஒரு பத்திரிக்கையில் கட்டுரை வெளியானது.
அதற்கு நான் மறுப்பு தெரிவித்திருந்தேன். இந்த நிலையில் எனது செல்போனுக்குமுன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் போன் செய்து, முன்னாள் முதல்வர்ஜெயலலிதாகூறித்தான் ஸ்டாலினை நான் கொலை செய்ய முயற்சித்ததாக ஒப்புக் கொண்டுநீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என மிரட்டினார்.
மேலும், உங்களை ஜாமீனில் எடுக்க வேண்டியது, எனது பொறுப்பு என்றும் கூறினார்.ஆனால் நான் முடியாது என்று மறுத்து விட்டேன். அதைக்கேட்டு கோபமடைந்தஇன்பத்தமிழன், அப்படி நீ செய்யாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டிவரும். உனது உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என்றார்.
இதுகுறித்து போலீஸ் டிஜிபிக்கு புகார் கொடுத்தேன். எனது வீட்டைச் சுற்றிலும்அடையாளம் தெரியாத சிலர் அவ்வப்போது வந்து கொண்டிருந்ததால் உயிருக்குஆபத்து ஏற்பட்டதாக உணர்ந்து, சென்னைக்கு வந்து விட்டேன்.
திமுக தூண்டுதலின் பேரிலேயே இன்பத்தமிழன் செயல்படுவதாக நினைக்கிறேன்.எனவே அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என நான் டிஜிபியிடம் கொடுத்த மனுமீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு தனது ரிட் மனுவில் செண்கமூர்த்தி கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி ரவிராஜபாண்டியன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்தநீதிபதி, புகார் மனு மீது 3 மாதத்திற்குள் சட்டபபடி விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டார்.
இன்பத்தமிழன் இப்போது திமுகவில் இருப்பது நினைவுகூறத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications