கோயில் விழாவில் குத்தாட்டம்-நிறுத்தியது போலீஸ்
சேலம்:
சேலம் ராஜகணதி கோயிலில் சினிமா பாடல்களுக்கு குத்தாட்ட நிகழ்ச்சி நடத்தஅனுமதி வழங்க போலீசார் மறுத்து விட்டனர்.
இங்கு, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திரைப்பட நடன நிகழச்சிக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.இதற்காக மதுரையிலிருந்து மாஸ் நாட்டியா நடனக் குழுவில் இருந்து 3 பெண்கள்உள்பட 20 கலைஞர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். மேலும் கிராமிய கலைஞர்களின்நையாண்டி மேளத்துக்கும் ஏற்பாடு ய்ெயப்ட்டிருந்தது. இதனால் ஏராளமானபார்வையாளர்கள் கோயில் முன் திரண்டிருந்தனர்.
நேற்று இரவு நடன நிகழ்ச்சி துவங்கியது. முதலில் சம்பிரதாயத்துக்காக பக்திபாடல்களை ஒலிபரப்பியவர்கள் அடுத்தாக கலக்கப் போவது யாரு என்று சினிமாபாடலை ஒலிக்கவிட்டனர்.
![]() |
இதற்கு கமல் வேடம் அணிந்த ஒருவர் டான்ஸ் ஆட மேடைக்கு வந்தார். அவருக்குதுணையாக ஆடுவதற்கு மற்றொரு பெண் மேடையில் தோன்றினார்.பார்வையாளர்கள் மகிழ்ச்சியில் குதித்தனர்.
ஆனால், அந்தப் பெண் படு மோசமான மூவ்மெண்ட்களை போட்டு ஆட, விசில்பறந்தது.
கோயில் விழா மேடையில் குத்தாட்டம் அரங்கேறியதால் அதிர்ச்சியடைந்த போலீசார்மைக் செட்காரரிடம் சென்று பாடலை நிறுத்துமாறு கூறினர். இதனால் அங்கு பரபரப்புஏற்பட்டது. விழாக் குழுவினரை அழைத்த போலீசார், சினிமா குத்தாட்டத்துக்குஎல்லாம் இங்கு அனுமதி இல்லை. கிராமிய நடனம் வேண்டுமானல் ஆடுங்கள் என்றுஎச்சரிக்கை செய்தனர்.
ஆனால், கோவில் விழா குழுவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விழா குழுவினரை காவல் நிலையத்துக்குஅழைத்து சென்று ஒரு மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார் போலீசார்.
அதன் பிறகு விழா மேடையில் நாதஸ்வர கச்சேரிக்கு மட்டுமே அனுமதிஅளிக்கப்பட்டது. வெறும் பீப்பி மட்டும்தானா என்று கத்தியபடி கலைந்தது கூட்டம்.













Click it and Unblock the Notifications