வாக்காளர் பட்டியலில் இஸ்லாமிய பெண்களின்புகைப்படம் இடம் பெறலாம்: உயர்நீதிமன்றம்
சென்னை:
புகைப் பட வாக்காளர் பட்டியலில் இஸ்லாமியப் பெண்களின் புகைப் படங்களைசேர்ப்பதற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது.
செனனையைச் சேர்ந்த அக்மல்கான் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைதாக்கல் செய்தார். அதில், தேர்தல் ஆணையம் தயாரித்து வரும் புகைப்பட வாக்காளர்பட்டியலில் இஸ்லாமிய பெண்களின் புகைப் படங்களையும் சேர்த்து வருகிறது.இஸ்லாமிய முறைப்படி பெண்கள் தங்களது முகத்தை பிறர் பார்க்கும் வண்ணம்காட்டக் கூடாது. மேலும், இஸ்லாமிய பெண்களின் புகைப் படங்கள் தவறுதலாகபயன்படுத்தப்படும் வாய்ப்பும் உள்ளது.
எனவே இஸ்லாமியப் பண்களின் புகைப் படங்களை வாக்காளர் பட்டியலில்சேர்க்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் கொண்ட பெஞ்ச்விசாரித்தது.
இதையடுத்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில்,கேரளாவிலும், மதுரை மத்திய தொகுதியிலும் புகைப்பட வாக்காளர் பட்டியல்தயாரிக்கும் பணி முடிவடைந்து விட்டது.
புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் மூலம் கள்ள ஓட்டுக்களை தடுக்கமுடியும் என்று விளக்கப்பட்டுள்ளது.
இந்த விளக்கத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. புகைப்படத்துடன் கூடியவாக்காளர் பட்டியலை வெளியிடும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.அதில் தலையிட நீதிமன்றம் விரும்பவிலலை.
திட்டமிட்டபடி மதுரை மத்திய தொகுதியில் புகைப்பட வாக்காளர் பட்டியலைவெளியிடலாம் என்று தீர்ப்பளித்தனர்.












Click it and Unblock the Notifications