மதானி ஜாமீன் மனு: 12ம் தேதி தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோவை குண்டு வெடிப்பு கைதி அப்துல் நாசர் மதானியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும்12ம் தேதிஅறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவையில் கடந்த 1998ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 50க்கும் மேற்பட்டோர்கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அல்-உம்மா அமைப்பின் தலைவர்பாஷா, கேரளாவைச் சேர்ந்த அரசியல் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதானி தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே சென்னைஉயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இந் நிலையில் மீண்டும் ஜாமீன்கோரி மதானி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான இரு தரப்பு வாதங்கள் இன்றுடன் முடிவடைந்தன. இதையடுத்து வரும் 12ம் தேதி மனு மீதுதீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தணிகாச்சலம் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications