ஜட்டி ரவி மாற்றம்-நெல்லைக்கு புதிய கமிஷ்னர்
சென்னை:
திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையராக உமா கணபதி சாஸ்திரிநியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகர காவல்துறை ஆணையராக இருந்தவர் பிராஜ் கிஷோர் ரவி. இவர்குடிபோதையில் குற்றாலத்தில் ஜட்டியுடன் குளித்தும், அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்களிடம் மது போதையில் ரகளை செய்தும் சமீபததில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து அவர் மீது விசாரணை நடந்து வருகிறது.நீண்ட விடுப்பில் போயுள்ளார் ரவி.இந்த நிலையில் நெல்லை மாநகர காவல்துறை ஆணையராக உமாகணபதி சாஸ்திரிநியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கடலோரக் காவல் படையின் டிஐஜியாக சாஸ்திரிஉள்ளார். தொடர்பான செய்திகள்பு சென்னை மாநகர இணைஆணையராக சாஸ்திரி பதவிவகித்துள்ளார். நாளை அவர் நெல்லை ஆணையராக பொறுப்பேற்கிறார்.
அதே போல தமிழக காவல்துறை அதிகாரிகள் பலர் மாற்றப்படடுள்ளனர். கூடுதல்எஸ்.பிக்களாக இருந்து வந்த 18 பேர் எஸ்.பிக்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் மகேஸ்வரி சென்னை சிபிசிஐடி விசேஷ பிரிவு எஸ்.பியாகவும், ராதிகாசேலம் நகர குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராகவும்நியமிக்கப்பட்டுள்ளனர்.
காமினி வட சென்னை போக்குவரத்து துணை ஆணையராகவும், ஜெயகெளரிசென்னை ஆணையர் அலுவலக தலைமையிடத்து துணை ஆணையராகவும்,சாமுண்டீஸ்வரி மதுரை மதுவிலக்கு பிரிவு எஸ்.பியாகவும், ராஜேஸ்வரி வணிககுற்றவியல் பிரிவு எஸ்.பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
லலிதா லட்சுமி சிவில் சப்ளைஸ் எஸ்.பியாகவும், மிகா சமூக நீதிப் பிரிவுஎஸ்.பியாகவும், விஜயக்குமாரி சிலை திருட்டு தடுப்புப் பிரிவு எஸ்.பியாகவும்நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை நகர போக்குவரத்து துணை ஆணையராக உமா மகேஸ்வரன், சென்னைமத்திய குற்றப் பிரிவு துணை ஆணயராக தர்மராஜன், நெல்லை குற்றப் பிரிவு துணைஆணையராக பிரகாசம், சென்னை தலைமைச் செயலக பாதுகாப்பு பிரிவு துணைஆணையராக சுகுமார், கோவை சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்.பியாகஞானபண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
லஞ்ச ஒழிப்புப் பிரிவு எஸ்.பியாக விஜயக்குமார், திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவுஎஸ்.பியாக மணிவேல், சேலம் மது விலக்கு பிரிவு எஸ்.பியாக அண்ணாமலைச் சாமிஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications