தமிழக கோவில்கள்-மசூதிகளுக்கு தீவிர பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகத்தில்கோவில்கள், மசூதிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் நேற்று பிற்பகல் மசூதி அருகிலும்,மார்க்கெட்டிலும் 3 குண்டுகள் வெடித்தன. இதில் 47 பேர் உடல் சிதறி பலியானார்கள்.200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மதக் கலவரம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு நாடுமுழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை நகரில் நேற்று இரவு முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.மாலை முதலே இந்த நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. ரயில் நிலையங்கள், மார்க்கெட்டுகள்,கோவில்கள், மசூதிகள், தர்ஹாக்கள், முக்கிய கட்டடங்கள், மக்கள் அதிகம் கூடும்இடங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் போலீஸார்குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

நகரில் உள்ள விடுதிகள், லாட்ஜுகளிலும் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.சந்தேகப்படும்படியான நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

மறு அறிவிப்பு வரும் வரை இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் எனகாவல்துறை அறிவித்துள்ளது.

இதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்களது காவல் நிலைய எல்லைக்குள்வரும் வழிபாட்டுத் தலங்கள், முக்கிய இடங்கள், கட்டடங்கள், சந்தைகள், பேருந்துநிலையங்கள், விமான நிலையங்களுக்கு உரிய பாதுகாப்பையும், தீவிர ரோந்துமற்றும் கண்காணிப்பிலும் ஈடுபட வேண்டும் என காவல்துறையினருக்கு டிஜிபிமுகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+