தமிழகத்தில் ரூ. 12,000 கோடி முதலீடு: அம்பானி
சென்னை:
தமிழகத்தில் ரூ. 12,000 முதலீட்டை மேற்கொள்ள தொழிலதிபர் அனில் அம்பானியின், அனில் திருபாய்அம்பானி குழுமம் முடிவு செய்துள்ளது.
பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி சென்னைக்கு வந்தார். முதல்வர் கருணாநிதியை சந்தித்து தமிழகத்தில்தனது நிறுவனத்தின் தொழில் முதலீடுகள் குறித்து கருணாநிதியிடம் ஆலோசனை நடத்தினார். தங்களது திட்டம்குறித்த அறிக்கையயையும் முதல்வரிடம் அவர் சமர்ப்பித்தார்.அதன்படி தமிழகத்தில் 1000 மெகாவாட் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க அம்பானியின்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மொத்தம் ரூ.12,000 மதிப்பிலான முதலீடுகளை தமிழகத்தில் மேற்கொள்ளஅம்பானி குழுமம் திட்டமிட்டுள்ளது.
இதில் மின் உற்பத்தி திட்டத்திற்கு மட்டும் ரூ.10,000 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்படவுள்ளது. மேலும் ரூ.2000 கோடி செலவில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் மாநாட்டு அரங்கத்தை கட்டவும் அம்பானி குழுமம்முடிவு செய்துள்ளது.
இதுதவிர சென்னை நகருக்கு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை மேற்கொள்ளவும் அம்பானி தனது விருப்பத்தைமுதல்வரிடம் தெரிவிததார். பின்னர் செய்தியாளர்களிடம் அம்பானி பேசுகையில், தமிழகத்தில் பெரிய அளவில்தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அனில் திருபாய் அம்பானி குழுமம் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் உடன் இருந்தார்.












Click it and Unblock the Notifications