நாளை அதிமுக செயற்குழு கூட்டம்: ஜெ. தலைமை-சசி பங்கேற்கிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக செயற்குவு கூட்டம் நாளை அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நடக்கவுள்ளது.தலைமை செயற் குழு உறுப்பினராகியுள்ள சசிகலாவும் இதில் பங்கேற்கிறார்.
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் இது. கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல்தோல்விக்கான காரணங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்படுகிறது. விரைவில் வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலில்கட்சியின் செயல்பாடு மற்றும் கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.செயற்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்துகொள்கிறார்கள்.
சசி தவிர அதிமுக தலைமை செயற் குழுவுக்கு 45 பெண் உறுப்பினர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
இதனால் அதிமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் முன்பை விட அதிகமான அளவில் பெண்கள்பங்கேற்கின்றனர்.
அதிமுகவின் பொருளாளராக சசிகலாவின் அக்காள் மகன் தினகரன் உள்ள நிலையில் இப்போது சசியேதலைமை செயற்குழு உறுப்பினராகியுள்ளார். இதன் மூலம் கட்சியில் அவரது பிடி மேலும் இறுகியுள்ளது.












Click it and Unblock the Notifications