உள்ளாட்சி தேர்தல்-வேட்பாளர் செலவு வரம்பு அதிகரிப்பு
சென்னை:
உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளரின் செலவு வரம்பை மாநில தேர்தல் ஆணையம் அதிகரித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்தலில் பணியில் ஈடுபடும்அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன.தேர்தலுக்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் அறிவிப்பு தமிழ் தவிர, சில தொகுதிகளில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும்வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டுஉறுப்பினர்கள், மாவட்ட வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் இந்த தேர்தலில் நேரடியாகதேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கட்சி அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுவர். நகாராட்சி,மாநகராட்சி கவுன்சிலர்களும் கட்சி அடிப்படையில் போட்டியிட்டு நேரடியாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
பேரூராட்சி, நகராட்சி தலைவர்கள், மாநகராட்சி மேயர் ஆகியோர் கவுன்சிலர்கள் மூலம் தேர்வுசெய்யப்படவுள்ளனர். இந்தப் பதவிகளுக்கு நேரடியாக தேர்தல் இல்லை.
இதற்கிடையே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவுத் தொகையை தேர்தல் ஆணையம்அதிகரித்துள்ளது.
கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் அதிகபட்சம் ரூ. 3,750 வரை செலவு செய்யலாம். கிராம பஞ்சாயத்துதலைவர் ரூ. 10,000 வரையும் ஊராட்சி ஒன்றிய வார்டு தலைவர் ரூ. 37,500 வரையும், மாவட்ட ஊராட்சி வார்டுஉறுப்பினர் ரூ.75,000 செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications