பிரேசிலில் மன்மோகன்-15ம் தேதி க்யூபா பயணம்
டெல்லி:
இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிக்கா ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டமைப்பின் முதல்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் பிரேசில் சென்றுள்ளார்.
இக் கூட்டத்துக்குப் பின் அணி சேரா நாடுகள் மாநாட்டில் பங்கேற்க க்யூபா செல்கிறார் பிரதமர். பிரேசில் செல்லும்வழியில் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் ஓய்வெடுத்தார்.இன்று பிரேசில் சென்றடையும் பிரதமர் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூடா டிசில்வா மற்றும் தென்ஆப்பிரிக்க தலைவர்களுடன் பேச்சு நடத்துகிறார். இதைத் தொடர்ந்து இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிக்காஇடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
கடந்த 1968ம் ஆண்டில் பிரதமராக இருந்த இந்திரா காந்திக்குப் பிறகு பிரேசில் செல்லும் முதல் பிரதமர்மன்மோகன் சிங் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து க்யூபா செல்லும் பிரதமர் ஹவானாவில் நடக்கும் 14வது அணி சேரா நாடுகளின் மாநாட்டில்பங்கேற்கிறார். இக் கூட்டத்தில் 116 நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.
ஹவானாவில் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பையும் தனியே சந்தித்து பிரமதர் பேச்சு நடத்தவுள்ளார்.












Click it and Unblock the Notifications