For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிற்பட்டவர்களில் கிரீமி லேயருக்கு இட ஒதுக்கீடுகூடாது-தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பிற்படுத்தப்பட்டவர்களில் வசதியானவர்களுக்கு (கிரீமி லேயர்) இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என தமிழகஅரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வசதியானவர்களை அடையாளம் கண்டு அவர்களை பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டு பட்டியலில்இருந்து நீக்குமாறு நீதிமன்றம் கூறியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசை எதிர்த்து வாய்ஸ் என்ற ஒரு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடுத்திருந்தது. தனது மனுவில்,

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை எதிர்த்து இந்திரா சகானே தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கும்போது,

அவர்களில் பொருளாதார, சமூக, கல்விரீதியில் மேம்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன் போகக் கூடாதுஎன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்களை இட ஒதுக்கீட்டில் இருந்து 6 மாதத்துக்குள் நீக்க வேண்டும் எனஅனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், அந்தத் தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. எனவே பிற்படுத்தப்பட்டவர்களில் கிரீமி லேயர்என்றழைக்கப்படும் பொருளாதாரத்தில் முன்தங்கியவர்களை இட ஒதுக்கீட்டில் இருந்து நீக்க உத்தரக விடவேண்டும்.

இவ்வாறு வாய்ஸ் அமைப்பு தனது மனுவில் கூறியிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மாத்தூர், கபீர் ஆகிய நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்,

பொருளாதார, சமூக, கல்விரீதியில் பிற்படுத்தப்பட்டவர்களை முன்னேன்றத் தான் இட ஒதுக்கீடே கொண்டுவரப்பட்டது. அதனால் வசதி படைத்தவர்கள் இந்த இட ஒதுக்கீடு பட்டியலில் வருவது சரியல்ல என்றனர்.

மேலும் இது தொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என மண்டல் கமிஷன் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்தது நினைவுகூறத்தக்கது. ஆனால், தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து அமலில் உள்ளதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X