தீவிரவாதிகளை ஒடுக்க கடும் சட்டம்- விஎச்பி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தீவிரவாதிகளை ஒடுக்க கடுமையான சட்டங்களை பிறப்பிக்க வேண்டும் என விஸ்வஇந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கல் கூறினார்.
சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:எங்கள் அமைப்பினரின் விருப்பத்திற்கேற்ப, எனது பிறந்த நாளை கொண்டாட இங்குவந்துள்ளேன். நாட்டில் பயங்கரவாதமும், வன்முறையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தினமும் ஏதாவது ஒரு இடத்தில் குண்டு வெடிக்கிறது.
வன்முறை தலை தூக்கி வருகிறது. இதனால், அப்பாவி பொதுமக்கள் பலியாகின்றனர்.ஆனால், மத்திய அரசோ பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல்,அவர்களுக்கு சாதகமாக, மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறது.
பயங்கரவாதத்தை அடக்க வேண்டிய மத்திய அரசு, தினமும் ஏதாவது ஒரு விழாநடத்தி பொழுதைக் கழித்துக் கொண்டுள்ளது.
சர்வதேச நாடுகள் ஒன்று சேர்ந்து, பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையானசட்டங்களை பிறப்பித்து பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications