விமான நிலையத்தில் பொக்கே ஏற்படுத்திய பீதி
சென்னை:
தமிழக ஆளுனர் பர்னாலா செல்லவிருந்த டெல்லி விமானம் புறப்படும் சமயம்,சென்னை விமான நிலையத்தில், கேட்பாரின்றி கிடந்த பூங்கொத்து (பொக்கே) பெரும்பீதியை ஏற்படுத்தியது.
சென்னை விமான நிலையத்தின் காமராஜர் உள்நாட்டு முனையத்தில், விமானத்தில்ஏறுவோர் செல்லும் பகுதியில் ஒரு கூடையில் பூங்கொத்து கிடந்தது. கேட்பாரின்றிநீண்ட நேரம் அது கிடந்ததால் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்று பீதி ஏற்பட்டது.இதையடுத்து விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாரும்,வெடிகுண்டுநபுணரக்ளும் மோப்ப நாய்களுடன விரைந்து வந்து அந்த பூங்கொத்தைசோதனையிட்டனர். ஆனால் அதில் குண்டு ஏதுமில்லை.
போதையில் விமானத்துக்குள் ஓடிய பயணி:
இதற்கிடையே துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில், குடிபோதையில் அங்கும் இங்கும் ஓடி ரகளை செய்த போடிநாயக்கனூரைச் சேர்ந்த பயணியைபோலீஸார் கைது செய்து கீழே இறக்கினர்.
துபாயிலிருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் நிறுவனம் வந்து கொண்டிருந்தது. விமானம் சென்னையை நெருங்கியபோது அதில் பயணித்துக்கொண்டிருந்த தனசேகரன்என்ற 45 வயது பயணி திடீரென எழுந்து விமானத்துக்குள் ஓட ஆரம்பித்தார்.
குடிபோதையில் இருந்த அவர் சீட் பெல்ட்டை அணியவும் மறுத்தும், உட்கார மறுத்தும் ரகளை செய்தார். இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.சக பயணிகளும், விமான ஊழியர்களும் சிரமப்பட்டு அவரை அமுக்கிப் பிடித்து உட்கார வைத்து பெல்ட்டை போட்டு கட்டினர்.
விமானம் தரையிறங்கியதும் அந்த நபரை போலீஸாரிடம் விமான ஊழியர்கள் ஒப்படைத்தனர். போலீஸார் தனசேகரனை கைது செய்தனர். தனசேகரன்தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். துபாயில் கூலி வேலை பார்த்து வருகிறார். ஊருக்குத் திரும்பும் சந்தோஷத்தில் மப்பு ஏற்றிக்கொண்டு விமானத்தில் ஆட்டம் போட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட தனசேகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications