மும்பை-16 வயது சிறுமியை கற்பழித்த 6 பேர்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மும்பையில் தெருக்களில் பேப்பர் பொறுக்கும் 16 வயது சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் கற்பழித்துள்ளது.
மும்பையின் முலுந்த் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமி, தெருக்களில் பேப்பர்,பிளாஸ்டிக் பைகளை பொறுக்கி வாழ்க்கை நடத்தி வருபவர்.வாசி ரயில் நிலையப் பகுதியில் கடந்த 10ம் தேதி இரவு 10 மணிக்கு அச்சிறுமியை 6 பேர் கொண்ட ஒரு கும்பல்தூக்கிச் சென்றது. அருகில் உள்ள ரயில் நிலையத்தில் காலியாக கிடந்த ரயில் பெட்டியில் வைத்து அச்சிறுமியை,அந்தக் கும்பல் கற்பழித்துள்ளது.
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அந்த சிறுமி கொடூரமாக கற்பழிக்கப்பட்டுள்ளார். குத்துயிரும்,குலையுருமாக ரத்தக் காயத்துடன் கிடந்த அந்த சிறுமியை மீட்ட பொதுமக்கள் அருகில் உள்ள அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து கற்பழித்த கும்பலை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications